போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய திரைப்பட விழா கோவாவில் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா. இந்தாண்டுக்காகன 55வது பட விழா கோவாவில் நவ., 20ம் தேதி துவங்கியது. இந்த விழாவில் பல்வேறு தலைப்புகளில் திரைப்பிரபலங்கள் பங்கேற்று பேசினர். அதில் சினிமாவில் புதியவர்களுக்கான வாய்ப்பு குறித்து பாலிவுட்டின் முன்னணி நடிகை கிர்த்தி சனோன் பேசினார்.
அவர் கூறுகையில், ‛‛நான் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து பாலிவுட் எனக்கு வரவேற்பு கொடுத்து வருகிறது. சினிமா பின்னணி இல்லாமல் ஒருவர் வந்தால் அவருக்கான அடையாளம் கிடைக்க காலதாமதம் ஆகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம் இரண்டு மூன்று படங்களுக்கு பின் நீங்கள் கடினமாக உழைத்தால் உங்கள் வெற்றி, சாதனையை யாராலும் தடுக்க முடியாது. நெப்போடிசத்திற்கு பாலிவுட்டை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. பார்வையாளர்களும், ஊடகங்களும் ஒரு காரணம். ஏனென்றால் அவர்களை பெரிதாக காட்டுவதால் ரசிகர்களின் எண்ணமும் அப்படியே அமைகிறது. இது ஒரு வட்டம் போலத்தான். என்னை பொறுத்தவரையில் திறமை இருந்தால் உங்களுக்கான வாய்ப்பு நிச்சயம் தேடி வரும், திறமை இல்லை என்றால் வாய்ப்புகள் குறைவு தான்'' என்றார்.