அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய திரைப்பட விழா கோவாவில் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா. இந்தாண்டுக்காகன 55வது பட விழா கோவாவில் நவ., 20ம் தேதி துவங்கியது. இந்த விழாவில் பல்வேறு தலைப்புகளில் திரைப்பிரபலங்கள் பங்கேற்று பேசினர். அதில் சினிமாவில் புதியவர்களுக்கான வாய்ப்பு குறித்து பாலிவுட்டின் முன்னணி நடிகை கிர்த்தி சனோன் பேசினார்.
அவர் கூறுகையில், ‛‛நான் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து பாலிவுட் எனக்கு வரவேற்பு கொடுத்து வருகிறது. சினிமா பின்னணி இல்லாமல் ஒருவர் வந்தால் அவருக்கான அடையாளம் கிடைக்க காலதாமதம் ஆகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம் இரண்டு மூன்று படங்களுக்கு பின் நீங்கள் கடினமாக உழைத்தால் உங்கள் வெற்றி, சாதனையை யாராலும் தடுக்க முடியாது. நெப்போடிசத்திற்கு பாலிவுட்டை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. பார்வையாளர்களும், ஊடகங்களும் ஒரு காரணம். ஏனென்றால் அவர்களை பெரிதாக காட்டுவதால் ரசிகர்களின் எண்ணமும் அப்படியே அமைகிறது. இது ஒரு வட்டம் போலத்தான். என்னை பொறுத்தவரையில் திறமை இருந்தால் உங்களுக்கான வாய்ப்பு நிச்சயம் தேடி வரும், திறமை இல்லை என்றால் வாய்ப்புகள் குறைவு தான்'' என்றார்.