டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாள திரையுலகின் சீனியர் இயக்குனரும் கேரள திரைப்பட அகாடமியின் சேர்மேனுமான இயக்குனர் ரஞ்சித், பெங்காலி நடிகையான ஸ்ரீலேகா மித்ரா என்பவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி தனது சேர்மன் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் மீது போலீசார் வழக்கும் பதிந்துள்ளனர். இந்த நிலையில் வளர்ந்து வரும் நடிகர் ஒருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ரஞ்சித் தன்னிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டார் என காவல்துறையில் புகார் அளித்து இன்னொரு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அந்த புகாரில், ‛இயக்குனர் ரஞ்சித் படத்தில் நடிப்பதற்காக நான் ஆடிஷனுக்காக அவரை சந்திக்க ஹோட்டலுக்கு சென்றபோது அவர் தன்னுடைய அறையில் என்னை ஆடைகளை களையச் செய்து நிர்வாணமாக புகைப்படங்கள் எடுத்தார். நான் அதை ஆடிஷன் என்று தான் நினைத்தேன். ஆனால் அந்த புகைப்படங்களை அப்போதே நடிகை ரேவதிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அந்த புகைப்படங்கள் எல்லாம் நடிகை ரேவதிக்கும் பிடித்திருப்பதாக என்னிடம் கூறிய அவர், மறுநாள் எனக்கு ஒரு சிறிய தொகையையும் கொடுத்து அனுப்பினார். அந்த மன உளைச்சலில் இருந்த நான் தற்போது ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து இத்தனை வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ரஞ்சித் மீது புகார் அளித்துள்ளேன்' என்று கூறியிருந்தார்.
அவரது இந்த புகாரில் நடிகை ரேவதி பற்றியும் குறிப்பிட்டு இருந்தது இன்னொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகை ரேவதியிடம் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “என்னையும் இயக்குனர் ரஞ்சித்தையும் சம்பந்தப்படுத்தி மீடியாக்களில் வெளியான அந்த செய்தியை நானும் பார்த்தேன். அந்த குற்றச்சாட்டில் சொல்லப்பட்டிருப்பது போல எந்த புகைப்படங்களும் எனக்கு அனுப்பப்படவில்லை. அதனால் அது குறித்து கமெண்ட் செய்வது தேவையில்லாத ஒன்று என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.




