Advertisement

சிறப்புச்செய்திகள்

பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு | திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜாதி படம் எடுத்து சம்பாதிப்போர் சமுதாய முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை : திருப்பூர் சுப்ரமணியம் வேதனை

30 ஆக, 2024 - 03:52 IST
எழுத்தின் அளவு:
Those-who-make-money-by-making-caste-films-have-done-nothing-for-the-progress-of-society:-Tirupur-Subramaniam-Anguish

திருப்பூர் : ஜாதியின் பெயரால் படம் எடுத்து கோடிகளை சம்பாதிக்கும் சினிமா துறையினர் தங்கள் சமுதாய முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை. அதன் பெயரால் தங்கள் வாழ்வை மட்டுமே உயர்த்திக் கொள்கின்றனர், என தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

ஜாதியை முன்னிறுத்தி படங்கள்

திருப்பூர் 'சக்தி' பிலிம்ஸ் சுப்ரமணியம் கூறியதாவது: தற்போது சினிமாவில் ஜாதியை முன்னிறுத்தி படம் எடுப்பது அதிகரித்து வருகிறது. சில ஆண்டு முன்னர் ஜாதி பெயர்களுடன் சினிமாக்கள் வந்தன. ஆனால் அவற்றில் பிற ஜாதிகள் குறித்து பேசாமல், கதைக்கு அவசியமானது குறித்து மட்டுமே இடம் பெற்றது. இன்று வெகுஜன மீடியாவான சினிமாவில், சிலர் குறிப்பிட்ட ஜாதியினரை மட்டுமே விளிம்பு நிலை மக்கள் என்ற ரீதியில், ஏதோ ஒரு காலத்தில் எங்கோ ஓரிடத்தில் நடந்த சம்பவத்தை பெரிது படுத்தியும், பிற ஜாதியை கொடூரமாகவும் சித்தரிக்கின்றனர்.

சொகுசு வாழ்க்கை
எல்லா ஜாதியிலும் விளிம்பு நிலை, வறுமை நிலை மக்கள் உள்ளனர். ஜாதியை வைத்து படம் எடுத்து அதில் சம்பாதித்த யாரும் அவர்கள் குறிப்பிடும் அந்த விளிம்பு நிலை மக்களுக்கு எந்த உதவியோ, அவர்கள் முன்னேற்றத்துக்கான நடவடிக்கையோ எடுக்கவில்லை. தங்கள் வாழ்க்கைத் தரத்தை மட்டுமே உயர்த்திக் கொள்கின்றனர். சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர். வசதியான வாழ்க்கை வாழ்வதை தவறு என்று சொல்லவில்லை. விளிம்பு நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் குறித்து நேர்மறை எண்ணங்களை தரும் வகையில் படம் எடுக்க வேண்டும்.

நிச்சயம் பிளாப் ஆகும்
முதல் பாதிவரை நல்ல கதைக் கருவை கொண்டு சென்று விட்டு, இரண்டாம் பாதியில் ஜாதியை புகுத்துவது தவறு. இதை எந்த ரசிகரும் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் தான் இது போன்ற படங்கள் சில காட்சிகள் மட்டுமே நல்ல ரிசல்டை தருவதோடு, இரண்டாவது நாளிலேயே பிளாப் ஆகி விடுகிறது. எதிர்காலத்தில் இது போல் வரும் படங்கள் நிச்சயம் படுதோல்வியை மட்டுமே சந்திக்கும்.

சினிமாவுக்கு ஜாதி தேவையில்லை
மூன்று மணி நேரம் சினிமா பார்க்க வரும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக படம் எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒரு ஜாதியினரை மற்றொரு ஜாதியினர் கொடுமைப்படுத்தியதாக சித்தரித்து, ஜாதி வெறியை துாண்டி, இரு பிரிவிடையே தேவையற்ற பகைமையை உருவாக்குகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். ஆரோக்கியமான சினிமா துறைக்கு இது அவசியமில்லை.

இமேஜை சிதைக்கும் கலைஞர்கள்
இன்றைய நிலையில் ஜாதி பேதம் எங்கும் இல்லை. எந்த ஜாதியும் அந்தஸ்து தருவதில்லை. ஒருவரின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் ஆகியன தான் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. யாரையும் துன்புறுத்தாமல், ஏமாற்றாமல் வாழ்வில் முன்னேற வேண்டும். எந்த கலைஞனையும் எந்த ரசிகனும் ஜாதி கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. சிலர் தங்கள் படைப்புகளில் தாங்களாகவே அதை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். திறமையான கலைஞர்கள் கூட இது போல் சினிமா எடுத்து தங்கள் இமேஜை சிதைத்துக் கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஷகிலா சொன்னது உண்மையா? - ரூபா ஸ்ரீ விளக்கம்ஷகிலா சொன்னது உண்மையா? - ரூபா ஸ்ரீ ... புதுச்சேரியில் படமான பிக்பாஸ் 8 புரொமோ : இவர் தான் தொகுப்பாளர் புதுச்சேரியில் படமான பிக்பாஸ் 8 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Good Bad Ugly
    • குட் பேட் அக்லி
    • நடிகர் : அஜித் குமார் ,பிரசன்னா
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :ஆதிக் ரவிச்சந்திரன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,பிரசன்னா,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in