Advertisement

சிறப்புச்செய்திகள்

ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது | விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வியால் நடிப்பை விட்டே ஒதுங்கினேன் : நடிகை ரோஜா | மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அறிமுக இயக்குனர் டைரக்சனில் மோகன்லால் நடிக்கும் படம் டிசம்பரில் துவக்கம் | ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை

24 அக், 2025 - 11:55 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-Kalkis-social-story-in-cinema

கல்கி கிருஷ்மூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்கிற வரலாற்று புதினம் திரைப்படமானது அனைவரும் அறிந்த ஒன்று. பலரின் முயற்சிக்கு பிறகு கடைசியாக மணிரத்னம் அந்த படத்தை இயக்கினார். அது இரண்டு பாகங்களாக வெளிவந்து வெற்றியும் பெற்றது.

ஆனால் கல்கி எழுதிய சமூக கதை ஒன்றும் திரைப்படமானது. அந்த படம் 'பொன்வயல்'. ஏ.டி.கிருஷ்ணசாமி இயக்கிய இந்த படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன், அஞ்சலிதேவி, ஆர்.எஸ்.மனோகர், டி.வி.குமுதினி, மைனாவதி, கே.சாரங்கபாணி, டி.பி.முத்துலட்சுமி, வி.கே.ராமசாமி, கே.ஏ.தங்கவேலு, 'புலிமூட்டை' ராமசாமி, பி.டி.சம்பந்தம், டி.ஆர்.பி.ராவ், டி.இ.கிருஷ்ணமாச்சாரி, கே.வி.சீனிவாசன், ராமையா சாஸ்திரி, கே.சீனிவாசன், சந்திரன் மற்றும் பலர் நடித்தனர். துறையூர் ராஜகோபால் சர்மா இசை அமைத்திருந்தார். ஜெயந்தி பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர்.ராமச்சந்திரன் தயாரித்தார்.

கல்கி தனது வார இதழான கல்கியில் 'பொய்மான் கரடு' என்ற தலைப்பில் ஒரு தொடரை எழுதினார், சேலம் மாவட்டத்தில் ஒரு பரந்த வறண்ட நிலத்தைப் பற்றிய கதை அது, அங்குள்ள ஒரு மலை ஓய்வெடுக்கும் மான் போன்றது, அதனால் அந்த இடத்திற்கு 'பொய்மான் கரடு' என்று பெயர் வந்தது.

அந்த பகுதியில் செங்கோடன் என்ற விவசாயி தனது 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்கிறார். தனது இடத்திற்கு அவர் 'பொன்வயல்' என்று பெயர் சூட்டி மகிழ்கிறார். திடீரென அந்த நிலத்திற்கு கீழே பெரும் தங்கபுதையல் இருப்பதாக வதந்தி பரவுகிறது. அதனை எடுக்க பலரும் முயற்சி செய்கிறார்கள். உண்மையில் அங்கு தங்க புதையல் இருந்ததா? அது யார் கைக்கு கிடைத்தது என்பதுதான் படத்தின் கதை. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம்தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் ... பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் பிளாஷ்பேக் : சபரிமலையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in