துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
குரங்கு பொம்மை படத்திற்கு பிறகு நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்த திரைப்படம் 'மகாராஜா'. இப்படம் வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 100 கோடியை கடந்தது.
இப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. தற்போது ஓடிடியிலும் படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிம்பு இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி உள்ளார். இதுபற்றி நிதிலன் அவரது சமூக வலைதள பக்கத்தில், " சிலம்பரசன் சார், மகாராஜா படத்தை பார்த்த பிறகு சந்தித்து பேசியதற்கு நன்றி. மகாராஜா படத்தை குறித்து ஆழமாக கலந்துரையாடினோம். நீங்கள் யதார்த்தம் மற்றும் ரொம்ப எளிமையாக இருந்தீர்கள். உங்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி'' என பதிவிட்டிருந்தார்.