'சப்தம்' படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு | யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகை ஹேமா. தமிழில் ஈரமான ரோஜாவே, அழகிய தமிழ்மகன், சத்யம், சாகசம், தேவி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு ரெசார்ட்சில் போதை பார்ட்டி நடப்பதாக போலீசுக்கு வந்த தகவலை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் போதை மருந்து உட்கொண்டதாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் சில தெலுங்கு, மற்றும் கன்னட சினிமாவின் துணை நடிகர், நடிகைகளும் இருந்தனர்.
இந்த போதை விருந்துக்கு ஏற்பாடு செய்தவர் தெலுங்கு நடிகை ஹேமா என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ஹேமா தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதோடு, அவர் படங்களில் நடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையான ஹேமா நான் எந்த போதை விருந்தையும் ஏற்பாடு செய்யவில்லை. போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் தனக்கு இல்லை. தெலுங்கு நடிகர் சங்கம் சரியாக விசாரிக்காமல் அவசரக்கோலத்தில் தனக்கு தடை விதித்திருப்பதாக கூறினார். அதோடு இதுகுறித்து தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு கடிதம் எழுதினார். அத்துடன் போதை மருந்து அருந்தவில்லை என்ற மருத்துவ சான்றிதழையும் அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய ஆதாரங்களை பரிசீலனை செய்த தெலுங்கு நடிகர் சங்க செயற்குழு ஹேமா மீது விதித்து இருந்த தடையை நீக்குவதாக அறிவித்தது.