'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
சின்னத்திரை நடிகையான பானுமதி அண்ணா, இனியா, சின்ன மருமகள் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், தனது கடந்த கால சோக வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் பேசிய பானுமதி, 'எனக்கு 16 வயதிலேயே திருமணம் முடிந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். என் கணவர் அதிகமாக குடித்து மஞ்சள் காமலை நோயால் உயிரிழந்தார். ஆனால், கணவரது வீட்டார் நான் அவரை கொன்றுவிட்டதாக கூறினார்கள். அதன்பின் அவர்கள் உறவே வேண்டாம் என்று பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
குடும்பத்திற்காக சீரியல்களில் துணை நடிகையாக 500 ரூபாய் சம்பளத்தில் நடிக்க ஆரம்பித்தேன். குழந்தைகளுக்காக இரண்டாவது திருமணம் செய்தேன். அந்த வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. அதன்பிறகு மீண்டும் குடும்பத்திற்காக ஓட ஆரம்பித்தேன். எனது மகன்களை தற்போது நல்லபடியாக வளர்த்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார். அவரது சோகக்கதை ரசிகர்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.