நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
முன்னணி மலையாள நடிகரான சுரேஷ் கோபி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றி வருகிறார். நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரேஷ் கோபி, கேரளாவின் முதல் பாரதிய ஜனதா எம்.பி.ஆனார். இது பாரதிய ஜனதா கட்சி கேரளாவிற்குள் பலம் பெறுவதற்கு வழியாக அமைந்தது. இதற்கான பரிசாக பாரதிய ஜனதா அரசு அவரை மத்திய அமைச்சராக்கியது.
இந்நிலையில் கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி “அமைச்சர் பதவியை விட எனக்கு சினிமாதான் பெரிது. சினிமாவுக்காக அமைச்சர் பதவியை இழகத் தயார்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசும்போது “எனக்கு அமைச்சர் பதவியை விட சினிமாதான் முக்கியம். 22 படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியுள்ளேன். இந்தப் படங்களில் நடிக்க அனுமதி வேண்டும் என்று கூறி நான் அமித்ஷாவிடம் ஒரு கடிதம் கொடுத்தேன். அவர் அந்தக் கடிதத்தை கோபத்தில் தூக்கி வீசி விட்டார்.
சினிமாவில் நடிக்க அனுமதி கிடைக்காவிட்டாலும் எனக்கு கவலை இல்லை. செப்டம்பர் 6ம் தேதி 'ஒற்றக்கொம்பன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சினிமாவில் நடிக்கும் காரணத்திற்காக அமைச்சர் பதவியை விட்டு என்னை நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை. சினிமா இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன்”என்று பேசி உள்ளார். சுரேஷ் கோபியின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.