புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மிகச் சிறந்த பாடல்களை தந்தபோதும் அதிகம் அறியப்படாமல் போன இசை அமைப்பாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் டி.ஜி.லிங்கப்பா. கே.பி.சுந்தராம்பாளின் இசை குருவான கோவிந்தராஜுலு நாயுடு என்ற பிரபல இசையமைப்பாளருக்கு மகனாக பிறந்தவர் லிங்கப்பா. திருச்சி கோவிந்தராஜ் லிங்கப்பா என்பது இயற்பெயர். சிறுவயதிலேயே நாடகங்களில் ஆர்மோனியம் வாசித்தார். மயூரா என்ற சினிமா ஆர்கெஸ்ட்ரா குழுவில் இணைந்து ஆர்மோனியம், மாண்டலின், கிடார் இசை கருவிகளை வாசித்தார். பின்னர் இசையமைப்பாளர், சி.ஆர்.சுப்பராமனின் உதவியாளர் ஆனார்.
அவர் இறந்தபின், டி.ஆர் மகாலிங்கமும் பந்துலுவும் சேர்ந்து தயாரித்து 1951ல் வெளியான 'மோகன சுந்தரம்' படத்தின் மூலம் இசையமைப்பாளரானார். பி.ஆர்.பந்துலு பத்மினி பிக்சர்ஸ் மூலம் 1954ம் ஆண்டு 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி” படத்தை தயாரித்தார் அதற்கும் லிங்கப்பா இசை அமைத்தார். அதன்பிறகு பத்மினி பிக்சர்ஸ்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆனார் லிங்கப்பா.
நடிகராக இருந்த சந்திரபாபுவை பாடகராக்கியது லிங்கப்பா. பி.சுசீலாவிற்கு மிகவும் புகழ் தேடி தந்த“அமுதைப்பொழியும் நிலவே” (தங்கமலை ரகசியம்) பாடல் இவரது இசையமைப்பே. தமிழ் ,கன்னடம், தெலுங்கு மொழியில் பல படங்களுக்கு இசையமைத்த லிங்கப்பா 2000மாவது ஆண்டில் தன் 72 வது வயதில் காலமானார்.
இன்று டி.ஜி.லிங்கப்பாவின் 97வது பிறந்த நாள். இசை உலகம் அவரை மறந்திருந்தாலும் நாம் நினைவு கூர்ந்து வாழ்த்துவோம்.