மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவில் எனக்குள் ஒருவன் என்ற படத்தின் மூலம் பாடலாசிரியர் ஆனவர் விவேக். அதையடுத்து 36 வயதினிலே, இன்று நேற்று நாளை என பல படங்களுக்கு பாடல் எழுதியவர், அட்லி இயக்கிய மெர்சல் படத்தின் மூலம் முதன்முதலாக விஜய்க்காக பாடல் எழுதினார். அதில், ‛ஆளப்போறான் தமிழன்' என்ற பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதையடுத்து தொடர்ந்து விஜய் நடித்த சர்க்கார், பிகில், பீஸ்ட், வாரிசு படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார் விவேக்.
இந்நிலையில் விவேக்கின் மனைவிக்கு சென்னையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டு வாழ்த்தினார். அவர் மட்டுமின்றி இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்கள்.