அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
லலிதா, பத்மினி, ராகினி வரிசையில் சினிமாவுக்கு வந்த சகோதரிகள் கே.ஆர். விஜயா, கே.ஆர்.சாவித்திரி, கே. ஆர்.வத்சலா. முதல் மூன்று சகோதரிகளில் பத்மினி மட்டுமே வெற்றி பெற்றார். இரண்டாவது வரிசை சகோதரிகளில் கே.ஆர். விஜயா மட்டுமே பெரியளவில் வெற்றி பெற்றார்.
மூவரின் தந்தை தெலுங்கர், தாய் மலையாளி. பிறந்தது திருத்தணியில். கோவில் திருவிழா மேடைகளில் ஆடிக்கொண்டிருந்த கே.ஆர் விஜயாவை கற்பகம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் . பிற்காலத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர்தான் கே.ஆர்.சாவித்திரி. 1970ம் ஆண்டு 'ரக்த புஷ்பம்' என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.
அதன் பிறகு 1985ம் ஆண்டில் யாத்ரா மற்றும் சாந்தம் பீகாரம், 1986ம் ஆண்டில் படையணி மற்றும் தேசதனக்கிளி, கரையறியில்லா போன்ற பல படங்களில் நடித்தார். மலையாள படத்தில் நடித்து வந்த சாவித்திரி 1990ம் தமிழில் அறிமுகமானார். தாலாட்டு பாடவா, சேலம் விஷ்ணு, மனைவி ஒரு மந்திரி, தங்கமான ராசா, தாலாட்டுப் பாடவா, தாலி கட்டிய ராசா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் மட்டுமே நாயகியாக நடித்த கேஆர் சாவித்திரி அதன் பின்னர் அக்கா அண்ணி உள்ளிட்ட வேடங்களில் குணச்சித்திர நடிகை ஆனார். 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள கே.ஆர்.விஜயா நாயகியாக மட்டுமே 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.