ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பு பெற்ற படம் 'பேச்சி'. சிறிய முதலீட்டில் அடர்ந்த காட்டுக்குள் எடுக்கப்பட்ட ஹாரர் திரில்லர் படம். வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் தயாரித்திருந்தனர். அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார்.
பால சரவணன், காயத்ரி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இந்த நிகழ்வில் பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது என்ற தகவலை தயாரிப்பாளர் கோகுல் பினாய் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும் போது "ஆகஸ்ட் 1ம் தேதி திரையிடப்பட்ட 'பேச்சி' சிறப்பு காட்சியின் போதே படத்தின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் புரோமோஷனுக்காக ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்கினோம். ஆனால், அதை தாண்டி மாஸாக படம் ரீச் ஆகி உள்ளது. பேச்சியாக நடித்த சீனிபாட்டிக்கு நன்றி. பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் கேட்கிறார்கள், வெரூஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் பண்ண போகிறோம், அதற்குப் பிறகு பேச்சி இரண்டாம் பாகம் உருவாகும்" என்றார்.