அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பு பெற்ற படம் 'பேச்சி'. சிறிய முதலீட்டில் அடர்ந்த காட்டுக்குள் எடுக்கப்பட்ட ஹாரர் திரில்லர் படம். வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் தயாரித்திருந்தனர். அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார்.
பால சரவணன், காயத்ரி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இந்த நிகழ்வில் பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது என்ற தகவலை தயாரிப்பாளர் கோகுல் பினாய் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும் போது "ஆகஸ்ட் 1ம் தேதி திரையிடப்பட்ட 'பேச்சி' சிறப்பு காட்சியின் போதே படத்தின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் புரோமோஷனுக்காக ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்கினோம். ஆனால், அதை தாண்டி மாஸாக படம் ரீச் ஆகி உள்ளது. பேச்சியாக நடித்த சீனிபாட்டிக்கு நன்றி. பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் கேட்கிறார்கள், வெரூஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் பண்ண போகிறோம், அதற்குப் பிறகு பேச்சி இரண்டாம் பாகம் உருவாகும்" என்றார்.