டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மாமன்னன் படத்தை அடுத்து வாழை என்ற படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் வாழை படம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாரி செல்வராஜ், விஜய் குறித்தும் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவரது ரசிகர் மன்றங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். தமிழகம் முழுக்க அவருக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவரது ஒவ்வொரு படமும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நேரத்தில் அவர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இப்படி அவர் ஒரு முடிவெடுப்பார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று கூறி இருக்கிறார் மாரி செல்வராஜ்.




