மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மாமன்னன் படத்தை அடுத்து வாழை என்ற படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் வாழை படம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாரி செல்வராஜ், விஜய் குறித்தும் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவரது ரசிகர் மன்றங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். தமிழகம் முழுக்க அவருக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவரது ஒவ்வொரு படமும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நேரத்தில் அவர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இப்படி அவர் ஒரு முடிவெடுப்பார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று கூறி இருக்கிறார் மாரி செல்வராஜ்.