‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவு, பல நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கியதுடன் பல மக்கள் வீட்டிலிருந்து வாழ்வாதாரம் இழக்கவும் காரணமாகவும் அமைந்துவிட்டது. பேரிடர் மீட்புக் குழுவும் இந்திய ராணுவ வீரர்களும் இணைந்து மீட்பு பணியிலும் நிவாரணப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டனர். அந்த சமயத்தில் இந்திய ராணுவத்தின் கவுரவமான லெப்டினென்ட் கர்னல் பொறுப்பு வகிக்கும் மோகன்லால் ராணுவ சீருடையில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
மேலும் தனது அறக்கட்டளை மூலமாக சுமார் மூன்று கோடி அளவிலான நிவாரண உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் கேரள மாநிலம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த யு-டியூப் சேனல் நடத்தி வரும் அஜு அலெக்ஸ் என்பவர் மோகன்லால் இப்படி ராணுவ சீருடை அணிந்து ராணுவ வீரர்களுடன் சேர்ந்து நிலச்சரிவு பாதித்த இடங்களை பார்வையிட்டது குறித்து கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து மலையாள நடிகர் சங்க செயலாளர் நடிகர் சித்திக் போலீசில் அளித்த புகாரின் பேரில் அஜு அலெக்ஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.