ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு பாதிப்பு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பல நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து தரைமட்டமான நிலையில் வீடு இழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகளை பெற்று வருகின்றனர். மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு திரை உலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் தங்களால் இயன்ற தொகையை பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண நிதிக்காக தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா', மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒன்றிணைந்து இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக நிதி திரட்டும் விதமாக கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறது. இது குறித்த தகவலை நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான நடிகர் சித்திக் அறிவித்துள்ளார். வரும் ஆக., 20ம் தேதி கேரளாவில் உள்ள அங்கமாலி நகரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது..
இது பற்றி அவர் கூறும்போது, “இந்த நிகழ்ச்சியை நாங்கள் வேறு ஒரு சமயத்தில் நடத்தலாம் என்று தீர்மானித்திருந்தோம். அதுமட்டுமல்ல இப்படி ஒரு பாதிப்பு நடக்கும் நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சியை நடத்துவது சரியல்ல என்றாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மழவில் விருது வழங்கும் விழா நிகழ்ச்சியை நடத்த தீர்மானித்துள்ளோம். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை அப்படியே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்காக வழங்க இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.