காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
இந்தியாவில் இயற்கை பேரிடர் நிகழும் போதெல்லாம் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் மொழி பாகுபாடு இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீக்கி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 400-க்கும் மேற்பட்ட பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோரின் வீடுகள் மண்ணில் புதைந்து தரைமட்டம் ஆகின. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களின் பங்களிப்பாக கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் லட்சங்களில் உதவிக்கரம் நீட்டிய நிலையில் தெலுங்கு திரையுலகில் இருந்து சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இருவரும் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கினார்கள். இதை அடுத்து நடிகர் பிரபாஸ் தற்போது இரண்டு கோடி ரூபாய் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
பான் இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸிற்கு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அதிக ரசிகர்கள் இருப்பதும் இந்திய அளவில் அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகராக அவர் மாறிவிட்டதும் தான் இந்த அளவிற்கு அவர் தாராளமாக நிவாரண நிதி வழங்க காரணம் என்றும் சொல்லப்படுகிறது.