ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

திமுக தலைவர் கருணாநிதியை அனைவரும் அறிவார்கள். ஆனால் ஒரு காலத்தில் காமெடியில் கொடி கட்டி பறந்த நடிகர் ஏ. கருணாநிதி பற்றி இன்றைய தலைமுறைக்கு அவ்வளவாக தெரியாது. இரண்டு கருணாநிதிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவருமே உயரம் குறைவானவர்கள். எம்ஜிஆரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள். இருவருமே திருவாரூரைச் சேர்ந்தவர்கள்.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து 1948ம் ஆண்டில் வெளிவந்த “ஆதித்தன் கனவு” என்ற படத்தில் ஏ.கருணாநிதி அறிமுகமானார். இதைத் தொடர்ந்து திகம்பர சாமியார், பொன்முடி, தேவகி, கல்யாணி, வளையாபதி என மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் நடித்து புகழ்பெற்றார். வீரபாண்டிய கட்டபொம்மன், மாங்கல்யம், ஆதித்தன் கனவு, பாலும் பழமும், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி. உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். குறிப்பாக காமெடி நடிகை டி.பி முத்துலட்சுமியின் ஜோடியாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
அந்த காலத்திலேயே ஏ.கருணாநிதி சென்னை தியாகராய நகரில், “மாமியா உணவகம்” என்ற பெயரில் ஒரு அசைவ உணவகம் நடத்தி வந்தார். இங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கூட ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அவரது உணவகம் பெயர் பெற்றிருந்தது. இதற்கு காரணம் ஏ.கருணாநிதி அடிப்படையில் ஒரு சமையல் கலைஞர்.
1923ல் திருவாரூரில் பிறந்த இவர் 58வது வயதில் காச நோயால் காலமானார்.