காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மலையாள திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரபலமான கதாசிரியராக வலம் வருபவர் ரெஞ்சி பணிக்கர். மம்முட்டி நடித்த கிங், சுரேஷ் கோபி நடித்த கமிஷனர் மற்றும் இவர்கள் இணைந்து நடித்த கிங் அண்ட் கமிஷனர் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு இவர் கதை எழுதியுள்ளார். அது மட்டுமல்ல பரத் சந்திரன் ஐபிஎஸ் மற்றும் ரவுத்திரம் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். கடந்த 10 வருடங்களாக ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராகவும் மாறி பிஸியான நடிகராக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதனால் இவர் கதை எழுதும் படங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்ட நிலையில் தற்போது ஜீத்து ஜோசப் இயக்க உள்ள புதிய படம் ஒன்றுக்கு கதை எழுதி வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக பஹத் பாசில் நடிக்கும் படம் ஒன்றை கதை எழுதி இயக்க உள்ளார் ரெஞ்சி பணிக்கர். இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பஹத் பாஸில் பிறந்த நாளன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.
கடந்த 2008ல் மம்முட்டி நடித்த ரவுத்திரம் படத்தை இயக்கிய ரெஞ்சி பணிக்கர் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் டைரக்சனுக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.