மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கங்குவா படத்தை முடித்துவிட்ட சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 44 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, முக்கிய வேடங்களில் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படப்பிடிப்பில் சூர்யாவுக்கு தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு சூர்யா ஊட்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் சூர்யாவின் நண்பரும் அவரது 2டி நிறுவன தயாரிப்பாளருமான ராஜசேகர் பாண்டியன் இதுகுறித்து சூர்யா ரசிகர்களை அமைதிப்படுத்தும் விதமாக, “அன்பான ரசிகர்களே. அது வெறும் சிறிய காயம் தான். அதனால் கவலைப்பட வேண்டாம். உங்களது அன்பாலும் பிரார்த்தனையாலும் சூர்யா அண்ணா தற்போது நன்றாக இருக்கிறார்” என்று ஒரு தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.