ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
கங்குவா படத்தை முடித்துவிட்ட சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 44 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, முக்கிய வேடங்களில் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படப்பிடிப்பில் சூர்யாவுக்கு தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு சூர்யா ஊட்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் சூர்யாவின் நண்பரும் அவரது 2டி நிறுவன தயாரிப்பாளருமான ராஜசேகர் பாண்டியன் இதுகுறித்து சூர்யா ரசிகர்களை அமைதிப்படுத்தும் விதமாக, “அன்பான ரசிகர்களே. அது வெறும் சிறிய காயம் தான். அதனால் கவலைப்பட வேண்டாம். உங்களது அன்பாலும் பிரார்த்தனையாலும் சூர்யா அண்ணா தற்போது நன்றாக இருக்கிறார்” என்று ஒரு தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.