நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
ஆந்திர மாநிலத்தில் நடந்த தேர்தலில் சந்திர பாபு நாயுடு, பவன் கல்யாண், ஆகியோர் இணைந்து அரசை நடத்தி வருகிறார்கள். சந்திர பாபு நாயுடு முதல்வராகவும், பவன் கல்யாண் துணை முதல்வராகவும் உள்ளார்கள். இந்நிலையில் ஆந்திர அரசில் உள்ள சில நியமனப் பதவிகளுக்கு யார், யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்து முடிந்துவிட்டதாம்.
பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினருக்கு அதில் 20 சதவீதப் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். ஆந்திரா திரைப்பட மற்றும் டிவி வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக பவன் கல்யாணின் அண்ணனும், சிரஞ்சீவியின் தம்பியுமான நாக பாபு நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படத் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கிறார் நாக பாபு. திரைப்படத் துறையினருடன் நாகபாபுவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால் தெலுங்குத் திரையுலகத்தை ஆந்திராவுக்கும் கொண்டு வர முயற்சிப்பார் என்பதால் அந்தப் பதவியை வழங்கலாம் என பவன் ஆலோசனை சொன்னாராம்.
முதலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சேர்மன் பதவியைப் பெற நாகபாபு விருப்பமாக உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன. நாகபாபுவுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் பவனின் முதல் விருப்பமாக இருந்ததாம். ஆனால், அதற்கான காலம் இன்னும் அதிகமாக உள்ளது. அதுவரையில் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக இருக்கட்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.