ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கன மழை காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள மலைப் பிரதேச சுற்றுலாத்தளமான வயநாட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இழப்பு என மாநிலங்களைக் கடந்தும் துயரத்தை உணர வைத்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் உதவிகளை அளித்து வருகின்றனர். தமிழ் நடிகர்களான விக்ரம், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா, நயன்தாரா, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா, மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், பஹத் பாசில், நஸ்ரியா, டொவினோ தாமஸ், ஆசிப் அலி உள்ளிட்ட பலரும் நிதியுதவி குறித்து அறிவித்துள்ளனர்.
ஆனால், கேரளாவில் அதிக வசூலைப் பெறும் சில முன்னணி தமிழ் நடிகர்கள், மற்ற மொழி நடிகர்கள் இன்னும் எந்தவிதமான நிதியுதவியையும் அறிவிக்காதது குறித்தும் சிலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். இரங்கல் சொல்வது மட்டும் தீர்வல்ல, முடிந்தவரையில் ஏதோ ஒரு சிறு உதவி செய்தாலும் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என பலரும் பதிவிட்டுள்ளனர்.
என்ன இயற்கை பேரிடர் நடந்தாலும் சிலர் கண்டு கொள்ளாமல் இருப்பதும், சிலர் உதவி செய்தாலும் அதை வெளியில் சொல்லாமல் இருப்பதும் திரையுலகத்தில் நடந்து வருகிறது.