‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

ரயிலிலேயே படமாக்கப்பட்ட திரைப்படங்கள் ஏராளமாக வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முதன் முறையாக ரயிலிலேயே படமானது 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' என்ற படம்.
இந்த படத்தில் ஜெய்சங்கர், சோ, விஜய நிர்மலா, விஜய லலிதா, எஸ்.என். பார்வதி, எஸ்.ஏ.அசோகன், செஞ்சி கிருஷ்ணன், வி.எஸ்.ராகவன், எஸ்.வி. ராமதாஸ், கே.விஜயன் மற்றும் 'கள்ளபார்ட்' நடராஜன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
சென்னையில் இருந்து கோவை செல்லும் 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' ரயிலில் ஒரு கொலை நடக்கிறது. இறந்தவருடன் பயணித்த ஒரே ஒரு சக பயணி சோ. இந்தக் கொலைக்குப் பின்னால் இருக்கும் குற்றவாளியைப் பிடிக்கும் பணி சி.ஐ.டி ஜெய்சங்கருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அவர் சோவின் உதவியுடன் வழக்கைத் தீர்க்கவும், இறுதியில் கொலையாளியைக் கண்டுபிடிக்கவும் புறப்படுகிறார். இதுதான் படத்தின் கதை.
புகழ்பெற்ற ஆங்கில நாவல் ஒன்றின் இந்த கதை தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் தயாரானது. முதல் படமாக மலையாளத்தில் 1967ல் 'கொச்சின் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் தயாரானது. இதில் பிரேம் நசீர் வழக்கைத் தீர்க்கும் சிஐடி அதிகாரியாக நடித்தார். 1968ல் தமிழில் நீலகிரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. திரைக்கதை வசனத்தை சோ எழுதியிருந்தார். திருமலை, மகாலிங்கம் இரட்டையர்கள் இயக்கி இருந்தனர்.




