சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
33வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் துவங்கி உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நடந்த துவக்க நாள் விழாவில் நடிகர் சிரஞ்சீவி அவருடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, மகன் ராம் சரண், மருமகள் , பேத்தி உபாசானா, பேத்தி கிலின் காரா ஆகியோருடன் லண்டன் சென்று அங்கு ஓய்வெடுத்து வந்தார்கள்.
அங்கிருந்து பாரிஸ் சென்று ஒலிம்பிக்ஸ் துவக்க நாள் விழாவில் கலந்து கொண்ட சிரஞ்சீவி மனைவி சுரேகாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. சுரேகாவுடன் ஒலிம்பிக்ஸ் ஜோதியின் பிரதியை வைத்திருக்கும் மகிழ்ச்சியான தருணம். எங்களின் பெருமைமிகு இந்தியக் குழுவின் ஒவ்வொரு வீரரருக்கும், எல்லாவற்றிலும் மிகச் சிறந்த பதக்கப் பட்டியலைப் பெற வாழ்த்துகிறோம், கோ இந்தியா, ஜெய்ஹிந்த்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவியின் மருமகளும், ராம்சரண் மனைவியுமான உபாசானா சில வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.