வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

33வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் துவங்கி உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நடந்த துவக்க நாள் விழாவில் நடிகர் சிரஞ்சீவி அவருடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, மகன் ராம் சரண், மருமகள் , பேத்தி உபாசானா, பேத்தி கிலின் காரா ஆகியோருடன் லண்டன் சென்று அங்கு ஓய்வெடுத்து வந்தார்கள்.
அங்கிருந்து பாரிஸ் சென்று ஒலிம்பிக்ஸ் துவக்க நாள் விழாவில் கலந்து கொண்ட சிரஞ்சீவி மனைவி சுரேகாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. சுரேகாவுடன் ஒலிம்பிக்ஸ் ஜோதியின் பிரதியை வைத்திருக்கும் மகிழ்ச்சியான தருணம். எங்களின் பெருமைமிகு இந்தியக் குழுவின் ஒவ்வொரு வீரரருக்கும், எல்லாவற்றிலும் மிகச் சிறந்த பதக்கப் பட்டியலைப் பெற வாழ்த்துகிறோம், கோ இந்தியா, ஜெய்ஹிந்த்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவியின் மருமகளும், ராம்சரண் மனைவியுமான உபாசானா சில வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.




