பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சிறிய வேடங்களில் நடித்து வந்தார். அவர் நடித்து பாப்புலர் ஆனதை விட தெலுங்கு இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி பாப்புலர் ஆனதுதான் அதிகம். தமிழில் நடிகர் ராகவா லாரன்ஸ், விஷால், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.
சமீபகாலமாக அவர் அமைதியாக இருந்து வருகிறார். என்றாலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா பற்றி முன்பு அவர் வெளியிட்ட கருத்துகள் இப்போது அவருக்கு எதிராக வந்து நிற்கிறது.
கர்னூலை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் நாகராஜூ அவதூறு வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3வது நகர போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படாலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.