சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு கதையின் நாயகனாக படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் 'கருடன்' படத்தின் நடித்ததின் மூலம் கதாநாயகனாக அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். இவரது நடிப்பில் அடுத்து கொட்டுக்காளி படம் வெளியாக உள்ளது. இதுதவிர விடுதலை 2 படமும் தயாராகி வருகிறது.
தற்போது கதைகளை கவனமாக கேட்டு படங்களை தேர்வு செய்கின்றார் சூரி. சமீபத்தில் தனது அடுத்த படத்திற்காக விலங்கு வெப் தொடர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் உடன் சூரி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. தற்போது உள்ள நிலவரப்படி பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.