மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு | ''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் |
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா ஹிந்தியை தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் தற்போது கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான லெஜெண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதேசமயம் கடந்த வருடம் தெலுங்கில் இவர் நான்கு படங்களில் நடித்திருந்தாலும் ஆச்சர்யமாக அந்த நான்கிலுமே பாடல் காட்சிகளில் நடனம் ஆடும் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது, தெலுங்கில் உருவாகி வரும் பாலகிருஷ்ணாவின் 109வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா
பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கும் இந்த படத்தை கொல்லி சந்தோஷ் ரவிந்த்ரா என்பவர் இயக்கி வருகிறார். சமீப நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் முக்கியமான ஆக் ஷன் காட்சியில் நடித்தபோது ஊர்வசிக்கு காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா.