நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' படத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடித்தனர். அந்தபடம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் இப்போது வரைக்கும் அந்த படம் டாப் டென் தமிழ் சினிமா பட்டியலில் இருக்கிறது. திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு ருத்ரைய்யா ஆரம்பித்த படம் தான் 'ராஜா என்னை மன்னித்துவிடு'. இதனை தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் இயக்க திட்டமிட்டார்.
அண்ணன் ஒரு அகிம்சைவாதி, தம்பி ஒரு நக்சல்வாதி இரண்டு பேருக்கும் இடையிலான விவாதம்தான் படம். இதில் அண்ணனாக சந்திரஹாசனும், தம்பியாக கமல்ஹாசனும் நடிக்க, சுஜாதா கமலின் மனைவியாகவும், சுமலதா காதலியாகவும் நடிக்க தேர்வாகினார்கள். 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் இந்த படம் கைவிடப்பட்டது.
இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்த பாடல்கள் பின்னாளில் வேறு படங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த திரைக்கதையின் பாதிப்பில் தான் பின்னாளில் கமல்ஹாசன் இரண்டு வேறுபட்ட கைதிகளின் உரையாடலாக 'விருமாண்டி' படத்தை எடுத்தார்.