''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' படத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடித்தனர். அந்தபடம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் இப்போது வரைக்கும் அந்த படம் டாப் டென் தமிழ் சினிமா பட்டியலில் இருக்கிறது. திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு ருத்ரைய்யா ஆரம்பித்த படம் தான் 'ராஜா என்னை மன்னித்துவிடு'. இதனை தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் இயக்க திட்டமிட்டார்.
அண்ணன் ஒரு அகிம்சைவாதி, தம்பி ஒரு நக்சல்வாதி இரண்டு பேருக்கும் இடையிலான விவாதம்தான் படம். இதில் அண்ணனாக சந்திரஹாசனும், தம்பியாக கமல்ஹாசனும் நடிக்க, சுஜாதா கமலின் மனைவியாகவும், சுமலதா காதலியாகவும் நடிக்க தேர்வாகினார்கள். 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் இந்த படம் கைவிடப்பட்டது.
இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்த பாடல்கள் பின்னாளில் வேறு படங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த திரைக்கதையின் பாதிப்பில் தான் பின்னாளில் கமல்ஹாசன் இரண்டு வேறுபட்ட கைதிகளின் உரையாடலாக 'விருமாண்டி' படத்தை எடுத்தார்.