300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று வளர்த்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன், நயன்தாராவை பல்வேறு தொழில் துறைகளில் ஈடுபடுத்தி வருகிறார். ஒரு பிரபல டீ செயின் கம்பெனியின் பங்குதாரராக இருக்கும் நயன்தாரா, பெண்களின் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் மலேசியன் கம்பெனி ஒன்றிலும் பங்குதாரராக இருக்கிறார். இதோடு ஒரு நாப்கின் பிராண்ட் கம்பெனியிலும் இணைந்திருக்கிறார்.
தற்போது தான் இணைந்துள்ள நாப்கின் கம்பெனியின் விளம்பரத்தை தனது இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களிடம் நூதன முறையில் விளம்பரம் செய்து வருகிறார். அந்த நாப்கினுடன் தான் இருக்கும் படத்தை வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது: "ஒரு பெண் ஒரு மாதத்தில் பலவிதமான நிலைகளை கடக்க வேண்டியிருக்கிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்கனவே பலவிதமான ஹார்மோன் மாற்றங்களை சந்தித்துவரும் நாம் நேசிக்கப்படுவதற்கும் ஆறுதல் படுத்தப்படுவதற்கும் ஏங்குகிறோம். நான் எனது கம்பெனி சானிடரி நாப்கின் உபயோகித்து வசதி கண்டுள்ளேன்.
அதே போல் நீங்களும் உங்களுக்கு வசதியான சவுகரியத்தை ஏற்படுத்தும் சானிடரி நாப்கின் ஒன்றினை தேர்வு செய்யுங்கள். இதை நான் இந்தத் தயாரிப்புடன் சம்மந்தம் இருப்பதால் சொல்வதாக நினைக்க வேண்டாம். இது எனக்கு மிகவும் நன்றாக வேலை செய்ததால் சொல்கிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரச்னையில்லாத சவுகரியமான மாதவிடாய் காலம் அமைய வாழ்த்துகிறேன். மாதத்தின் மற்ற நேரத்தைப்போல இந்த நேரமும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
பெண்கள் மீதான இந்த திடீர் விளம்பர அக்கறையை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.