14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் |
அஞ்சலியின் 50வது படம் ஈகை. அவருடன் சந்தோஷ் பிரதாப், பாரதிராஜா , சுனில், பொன்வண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், 'விருமாண்டி' அபிராமி, புகழ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் அசோக் வேலாயுதம் இயக்குகிறார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார், தருண் குமார் இசை அமைக்கிறார்.
படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: சாதிக்க துடிக்கிற ஒரு இளம் பெண்ணின் போராட்டம்தான் படத்தின் கதை. நயன்தாராவிற்கு 'அறம்' படம் அமைந்தது போல அஞ்சலிக்கு இந்த படம் அமையும். மும்பையில் இருந்து சட்டம் படிக்க சென்னை வரும் அவருக்கு இங்கு ஒரு பிரச்னை அதனை அவர் எப்படி கையாள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நம் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ புரட்சி பெண்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருத்தியின் கதை இது.
நாம் கடந்து செல்லும் எளிய மனிதனுக்குள்ளும் ஒரு பெரிய வாழ்க்கை புதைந்திருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையையும் இந்தக் கதை பேசும். அதைப் போல சிலர் நூறு வருஷம் வாழ்ந்திருப்பார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்க்கையில் மாற்றமோ, முன்னேற்றமோ நிகழ்ந்திருக்காது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைக்கும் தீர்வு சொல்கிற படமாகவும் இருக்கும். என்றார்.