5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
கோயம்புத்தூரை சேர்ந்தவர் அதுல்யா ரவி. 'காதல் கண்கட்டுதே' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு சுட்டுபிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, எண்ணி துணிக, வட்டம், காடவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது 'டீசல்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதுல்யா கோவையில் உள்ள வடவள்ளி மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் 2 ஆயிரம் ரொக்க பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதுல்யாவின் தாய், வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதுல்யாவின் வீட்டில் வேலை பார்க்கும் செல்வி தனது தோழியான சுபாஷினியுடன் இணைந்து பாஸ்போர்ட்டையும், பணத்தையும் திருடியது தெரியவந்தது. சம்பளம் தொடர்பாக அதுல்யாவுக்கும், பணிப்பெண்ணுக்கும் தகராறு இருந்து வந்ததாகவும், அந்த கோபத்தில் அதுல்யா வெளிநாடு செல்வதை தடுக்க பாஸ்போர்ட்டை திருடியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.