மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ், தெலுங்கு திரையுலகத்திற்கு ஈடாக தற்போது கன்னடத் திரையுலகமும் வளர்ந்துள்ளது. 'கேஜிஎப் 2, காந்தாரா' ஆகிய திரைப்படங்கள் கன்னடத் திரையுலகத்தை இந்திய அளவில் பேச வைத்த படங்களாக அமைந்தன.
கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் சில தனியார் ஸ்டுடியோக்கள் மட்டுமே உள்ளன. அருமையான தட்பவெப்ப நிலை கொண்ட அந்த ஊரில் அரசு சார்பில் பிலிம் சிட்டி எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை.
தற்போது மைசூரில் பிலிம் சிட்டி அமைக்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து பேசுகையில் அதை அவர் அறிவித்தார்.
மறைந்த கன்னட நடிகரான ராஜ்குமார் கன்னட சினிமாவுக்காக பிலிம் சிட்டி அமைக்க வேண்டும் என்று எப்போதோ கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், எந்த ஒரு மாநில அரசும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இந்நிலையில் மைசூரில் அரசு சார்பில் 100 ஏக்கர்நிலம் வழங்கப்பட்டுள்ளது. பிபிபி மாடலில் அங்கு விரைவில் அரசு பிலிம் சிட்டி அமைக்கப்படுமென முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், மாநில அரசு சார்பில் ஓடிடி நிறுவனம் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.