மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருப்பவர் பவன் கல்யாண். இவர் ஒரு படத்தில் நடிக்க 70 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலின் போது ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் சேர்ந்தே நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கட்சிகளுடன் இணைந்து பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதன் காரணமாக தற்போது ஆந்திராவின் துணை முதல்வராகியிருக்கிறார் பவன் கல்யாண்.
சமீபத்தில் அவர் ஆந்திர மாநில தலைமைச் செயலகத்திற்கு சென்றபோது அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பவன் கல்யாண், 3 நாட்கள் மட்டுமே தலைமைச் செயலகத்திற்கு நான் வந்துள்ளேன். அதனால் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அதோடு தற்போது ஆந்திரா மாநிலத்தில் நிதிநிலைமை ரொம்ப மோசமாக உள்ளது. அதனால் எனக்கு சம்பளம் வாங்கவே மனமில்லை. இனிமேல் சம்பளம் வாங்காமலேயே துணை முதலமைச்சராக பணியாற்ற போகிறேன் என்றும் கூறியிருக்கிறார் பவன் கல்யாண்.
இவரது இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று பாராட்டி உள்ளனர்.