‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இந்தியன் 2 படம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் உலகளவில் புரொமோஷன் செய்ய கிளம்பிவிட்டார். அந்தவகையில் மலேசியா சென்ற அவர் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தன.
இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அன்வர் இப்ராஹிம், ‛‛அரசு பணிகளுக்கு இடையில், இந்தியாவின் பிரபல கலைஞரும் 'சூப்பர் ஸ்டாருமான' கமல்ஹாசனுடன் நேரத்தை செலவிட எனக்கு நேரம் கிடைத்தது. ஊழலுக்கு எதிரான கண்டிப்பு உள்ளிட்ட திரையுலகம் தொடர்பான கருத்துக்களை பேசவும் பரிமாறிக் கொண்டோம்'' என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல், ‛‛உங்களைச் சந்தித்ததில் பெருமை அடைகிறேன் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம். பலதரப்பட்ட பிரச்னைகள் பற்றிய அறிவொளி கலந்த விவாதம். நமது நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் பற்றிய உங்கள் கருத்துகளை கேட்டு, சினிமாவின் முக்கியப் பங்கு மற்றும் சமூகத்தில் ஊழலுக்கு எதிரான கடுமையான சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை குறித்து உங்களுடன் ஒத்துப்போவதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்'' என குறிப்பிட்டுள்ளார்.