திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ஹிந்தி இயக்குனரான ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில், சூர்யா நடிக்கவிருந்த ஹிந்திப் படமான 'கர்ணா' படம் டிராப் செய்யப்பட்டதாக கடந்த சில தினங்களாக பாலிவுட்டில் தகவல் பரவியது.
மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரமான கர்ணனை மையமாக வைத்து அப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். இப்படத்தில் திரவுபதியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
படத்தில் எண்ணற்ற விஎப்எக்ஸ் காட்சிகள் இடம் பெற உள்ளதால் முதலில் போட்ட பட்ஜெட்டை விட தற்போது பட்ஜெட் எகிறிவிட்டதாம். சுமார் 500 கோடிக்கும் செலவாகும் என தெரிய வந்ததால் படத்தை டிராப் செய்ததற்காகக் காரணமாகச் சொன்னார்கள்.
ஆனால், படத்தை டிராப் செய்யவில்லை, தற்போதைக்குத் தள்ளி வைத்துள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கிறது. இந்த வருடத்தின் கடைசியில் படத்தை ஆரம்பிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஹிந்திப் படங்களில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக உயர வேண்டுமென்றுதான் சென்னையை விட்டு மும்பை சென்று சூர்யா செட்டில் ஆனார்.