பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி கடந்த 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கி 2009ம் ஆண்டு ஆந்திரா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறி கைதி நம்பர் 150 என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார் சிரஞ்சீவி. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவருக்கு மீண்டும் அரசியலில் என்ட்ரி கொடுக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். தனது தம்பியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கணிசமான வெற்றி கிடைத்து அவர் துணை முதல்வர் ஆகி இருக்கிறார். அடுத்த படியாக தம்பியின் ஜனசேனா கட்சியில் சிரஞ்சீவி முக்கிய பொறுப்புக்கு வரப்போவதாக ஆந்திராவில் செய்தி பரவி வருகிறது.