ராஜமவுலி பட நடிகர்களுக்கு பயிற்சி தரும் நாசர் | பவன் கல்யாண் பேரைச் சொல்லி கைத்தட்டல் வாங்கிய எஸ்ஜே சூர்யா | ரூ.1000 கோடி வசூலைக் கடக்குமா 'கல்கி 2898 ஏடி' | 'ஆர்யமாலா' என்னுடைய படம்: தயாரிப்பாளர் மீது இயக்குனர் குற்றச்சாட்டு | மீண்டும் வில்லியாகும் பரீனா ஆசாத் | ‛எதிர்நீச்சல்-2 கிடையாது.. ஆனால்!..' : திருச்செல்வம் கொடுத்த சர்ப்ரைஸ் | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டாரா விமல்? | சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்! | 'கேம் சேஞ்சர்' அப்டேட் கொடுத்த ஷங்கர் | காதலனை அறிமுகப்படுத்திய ஜெய்பீம் நடிகை ரஜிஷா |
விடுதலை, கருடன் படங்களுக்கு பிறகு சூரி, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'கொட்டுக்காளி'. இதில் மலையாள நடிகை அன்னா பென் ஹீரோயினாக நடிக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் தியேட்டரில் வெளியிடப்படவில்லை என்றாலும் பல சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்பி வருகிறார் சிவகார்த்திகேயன்.
ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்ற இந்த படம் தற்போது மேலும் ஒரு விருதினை பெற்றிருக்கிறது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் “டிரான்சில்வேனியா நாட்டில் நடைபெறும் திரைப்பட விழாவில் எங்களது 'கொட்டுக்காளிக் திரைப்படம் ஸ்பெஷல் ஜூரி விருது பெற்று அசத்தியுள்ளது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என தெவித்துள்ளார்.