26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல ஜவுளிக் கடை அதிபர் அருள் சரவணன். அதையடுத்து தனக்கு பொருத்தமான கதை தேடலில் ஈடுபட்டிருந்த அவர், பல இயக்குனர்களிடத்தில் கதை கேட்டு வந்தார். இந்த நிலையில், துரை செந்தில்குமார் சொன்ன கதை பிடித்து விட்டதை அடுத்து அவர் இயக்கத்தில் அடுத்து நடிக்க போகிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில், படப்பிடிப்பு தளத்தில் துரை செந்தில் குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் லெஜண்ட் சரவணன். அதோடு படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ், கருடன் உள்ளிட்ட பல படங்களை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




