லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சினிமா நடிகர்கள் எங்காவது வெளியில் சென்றால் அவர்களுக்கு 'பில்டப்' கொடுப்பதற்காக பாதுகாப்பு என்ற பெயரில் பவுன்சர்களை வைத்துக் கொள்வார்கள். ரசிகர்கள் யாரும் அவர்களை நெருங்குவதைத் தடுப்பதுதான் பவுன்சர்களின் வேலை. சினிமா விழாக்களில் இதை அதிகம் பார்க்கலாம். பவுன்சர்கள் வைத்தால்தான் விழாவுக்கே வருவேன் என்று சொல்லும் நடிகர்களும் இங்கு இருக்கிறார்கள்.
ஐதராபாத் விமான நிலையத்தில் நடிகர்கள் நாகார்ஜூனா, தனுஷ் நேற்று சென்று கொண்டிருந்தனர். அப்போது வயதான ரசிகர் ஒருவர் நாகார்ஜூனாவை நெருங்கிச் சென்றார். அவரை இழுத்து கீழே தள்ளினார் பவுன்சர் ஒருவர். பின்னால் வந்து கொண்டிருந்த தனுஷூம் அவரது செயலைப் பார்த்து அமைதியாக நடந்து போனார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, ரசிகர்களின் கண்டனத்தைப் பெற்றது. மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்வதா என பலரும் கமெண்ட் செய்தனர்.
இந்நிலையில் அந்த வீடியோவைப் பகிர்ந்து, “இப்போதுதான் எனது கவனத்திற்கு வந்தது. இப்படி நடந்திருக்கக் கூடாது. அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள முன்ஜாக்கிரதையாக இருக்கிறேன்,” என நாகார்ஜூனா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், பின்னால் அமைதியாகக் கடந்து போன தனுஷ் இது குறித்து எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை.