சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'கல்கி 2898 ஏடி' படம் இந்த வாரம் ஜூன் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்திற்காக மும்பையில் மட்டுமே ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரபாஸ், தீபிகா, அமிதாப், கமல் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். அதற்கடுத்து ஐதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இப்படத்திற்காக புரமோஷன் நிகழ்ச்சிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எங்குமே நடைபெறவில்லை.
இதனிடையே, பிரபாஸ் ஓய்வெடுப்பதற்காக ஐரோப்பாவிற்கு சென்றுவிட்டதாகவும் தகவல். இரண்டு வாரங்கள் வரை அங்கேயேதான் தங்கியிருக்கப் போகிறாராம்.
கமல்ஹாசன் இந்தப் படத்தில் நடித்தும் கூட சென்னையில் எந்த நிகழ்வும் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. பான் இந்தியா படம் என்று சொல்லிவிட்டு மும்பையோடு நிறுத்திக் கொண்டுள்ளது தெலுங்கு திரையுலகத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த மாநிலத்திலேயே தயாரிப்பாளர், இயக்குனர், நாயகன் எந்த விழாவையும் நடத்தாமல் போய்விட்டார்கள்.