மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் கடவுள் முருகனின் வரலாற்றை சொல்லும் ஸ்ரீவள்ளி, கந்தன் கருணை மாதிரியான புராண படங்கள் ஒரு காலத்தில் வெளிவந்தது. அதன் பிறகு முருகனின் பெருமைகளை பேசும் 'வருவான் வடிவேலன்' மாதிரியான சமூக படங்கள் வந்தது. சின்னத்திரையில் புராண மற்றும் பக்தி தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கியதும் பக்தி படங்கள் வருவது நின்று போனது.
இந்த நிலையில பல ஆண்டுகளுக்கு பிறகு 5 முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் ஒரு படத்தை ஜெயம் எஸ்.கே.கோபி தயாரிக்கிறார்.
இவர் தீவிர அரசியல்வாதியாக இருந்து பின்னர் ஆன்மிக ஈடுபாடு கொண்டு முருக பக்தர் ஆனவர். முருக கடவுளின் பெயரில் காது கேளாத, வாய் பேசாத, கண் தெரியாத மற்றும் ஆட்டிசம் உள்ள குழந்தைகளை 'தெய்வக் குழந்தைகள்' என்று அழைத்து அவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.
“நீண்ட நாட்களுக்கு பிறகு முருகர் குறித்த ஒரு திரைப்படத்தை தயாரிக் உள்ளேன். இதற்காக பல முருக பக்தர்களை சந்தித்து அவர்கள் வாழ்க்கையில் முருகன் கொடுத்த அற்புதங்களை சேகரித்து அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் முருக பக்தி குறித்த விழிப்புணர்வை இன்றைய தலைமுறையினர் இடம் பெரிய அளவில் எடுத்துச் செல்லும்” என்கிறார் கோபி.