தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
தமிழ் கடவுள் முருகனின் வரலாற்றை சொல்லும் ஸ்ரீவள்ளி, கந்தன் கருணை மாதிரியான புராண படங்கள் ஒரு காலத்தில் வெளிவந்தது. அதன் பிறகு முருகனின் பெருமைகளை பேசும் 'வருவான் வடிவேலன்' மாதிரியான சமூக படங்கள் வந்தது. சின்னத்திரையில் புராண மற்றும் பக்தி தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கியதும் பக்தி படங்கள் வருவது நின்று போனது.
இந்த நிலையில பல ஆண்டுகளுக்கு பிறகு 5 முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் ஒரு படத்தை ஜெயம் எஸ்.கே.கோபி தயாரிக்கிறார்.
இவர் தீவிர அரசியல்வாதியாக இருந்து பின்னர் ஆன்மிக ஈடுபாடு கொண்டு முருக பக்தர் ஆனவர். முருக கடவுளின் பெயரில் காது கேளாத, வாய் பேசாத, கண் தெரியாத மற்றும் ஆட்டிசம் உள்ள குழந்தைகளை 'தெய்வக் குழந்தைகள்' என்று அழைத்து அவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.
“நீண்ட நாட்களுக்கு பிறகு முருகர் குறித்த ஒரு திரைப்படத்தை தயாரிக் உள்ளேன். இதற்காக பல முருக பக்தர்களை சந்தித்து அவர்கள் வாழ்க்கையில் முருகன் கொடுத்த அற்புதங்களை சேகரித்து அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் முருக பக்தி குறித்த விழிப்புணர்வை இன்றைய தலைமுறையினர் இடம் பெரிய அளவில் எடுத்துச் செல்லும்” என்கிறார் கோபி.