ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது. இவற்றில் வெற்றி படங்கள் என்றால் 10 சதவீதம் கூட இருப்பது இல்லை. இந்தாண்டு இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டன. இவற்றில் நல்ல லாபம் தந்த படம் அரண்மனை 4 மட்டுமே. ஸ்டார், கருடன், மகாராஜா படங்கள் ஓரளவுக்கு வசூலை தந்தன. மற்ற படங்கள் பெரும்பாலும் நஷ்டம் தான்.
கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா தள்ளாட்டத்தை சந்தித்து வருகிறது. தொடர்ந்து தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். லைகா போன்ற பெரிய நிறுவனங்களே படம் தயாரிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக நடிகர்களின் சம்பளம் உள்ளது. படத்தின் பட்ஜெட்டில் பாதி நடிகர்கள் சம்பளத்திற்கே சென்று விடுகிறது.
முன்னணி நடிகர்கள் படங்கள் வெற்றி பெற்றால் உடனே சம்பளத்தை கோடிகளில் உயர்த்தி விடுகின்றனர். ஆனால் நஷ்டம் அடைந்தால் சம்பளத்தை குறைப்பதில்லை. இந்த பிரச்னை நீண்டகாலமாகவே தொடர்ந்து வருகிறது. இதை சரி செய்யும் பொருட்டு நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க சொல்லி வலியுறுத்தி விரைவில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்கில் இறங்க முடிவெடுத்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த விஷயமும் நடக்காது. படம் ரிலீஸ் கூட தடைப்பட வாய்ப்பு உள்ளது.