தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 44வது படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என சமீபத்தில் அறிவித்தனர். 2டி மற்றும் ஸ்டோன் பென்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.
தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரத்தில் அந்தமானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பூஜா ஹெக்டே இதுவரை ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி சம்பள தொகையாக பெற்று வந்தவர், இப்போது சூர்யா 44வது படத்தில் நடிக்க ரூ. 4 கோடி சம்பளமாக நிர்ணயம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.