என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சினிமாவைப் பொறுத்தவரை அது எந்த மொழியானாலும் ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டால் அதற்கு இரண்டாம் பாகத்தை உருவாக்கும் சூழல் ஒரு காலகட்டத்தில் உருவாகி விடும். இரண்டாம் பாகம் வெற்றி பெறும் போது அடுத்தடுத்த பாகங்களை உருவாக்க இயல்பாகவே ஆர்வம் வந்துவிடும். அப்படி தமிழில் காஞ்சனா(முனி சீரிஸ்), அரண்மனை ஆகிய படங்கள் நான்கு பாகங்களை தொட்டுவிட்ட நிலையில் தெலுங்கிலும் இதேபோல ஒரு வெற்றி படத்திற்கு மூன்றாவது பாகம் எடுக்கும் முயற்சி துவங்கியுள்ளது.
கடந்த 2019-ல் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரீன் பிர்ஸாடா இணைந்து நடித்த எப்-2 திரைப்படம் வெளியானது. குடும்பப் பின்னணியில் காமெடி கலாட்டாவாக உருவான இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த 2022-ல் இதன் இரண்டாம் பாகமாக எப்-3 திரைப்படம் வெளியானது. அந்தப் படமும் ஓரளவுக்கு வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகமாக எப்-4 படம் உருவாக இருக்கிறது என்றும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு பாகங்களிலும் தொடர்ந்த அதே நட்சத்திரக் கூட்டணி தான் இந்த மூன்றாம் பாகத்திலும் இடம் பெற இருக்கிறது. இரண்டு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் அனில் ரவிபுடி தான் இந்தப் படத்தையும் இயக்க உள்ளாராம்.