ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பிசியாக இசையமைத்து வருகிறார் அனிருத். தற்போது தமிழில் வேட்டையன், இந்தியன் 2 உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், நயன்தாரா - விக்னேஷ் சிவன் நடத்தி வரும் டிவைன் புட்ஸ் என்ற நிறுவனத்தில் சமீபத்தில் முதலீடு செய்தார். அதையடுத்து தற்போது வி.எஸ்.மணி அண்ட் கோ என்ற பில்டர் காபி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இணைந்திருக்கிறார். அதோடு, இந்த நிறுவனத்தில் அவர் அம்பாசிடராகவும் உள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா என்ற இரண்டு மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் இந்த பில்டர் காபி நிறுவனத்தில் அனிருத் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் முதலீடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.