சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நடந்து முடிந்து ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் பித்தாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். அது மட்டுமல்லாது அவரது கட்சி போட்டியிட்ட 21 சட்டசபைத் தொகுதிகள், 2 லோக்சபா தொகுதிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்றது.
பவன் கல்யாணின் இரண்டாவது மனைவி ரேணு தேசாய். இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். தனது மகன் அகிரா, மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார் ரேணு தேசாய். பவன் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரது மகன் அகிரா தனது அப்பாவுடன் டில்லி வரை சென்று பிரதமர் மோடியையும் சந்தித்தார். அது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தார் ரேணு.
இந்நிலையில் இன்று(ஜூன் 12) ஆந்திர மந்திரிசபையில் அமைச்சராக (துணை முதல்வர் வாய்ப்பு) பதவியேற்ற பவன் கல்யாணுக்கு ரேணு தேசாய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவுக்கு தனது மகன், மகள் ஆகியோர் அவரது அப்பா பதவியேற்பு விழாவுக்கு ரெடியாகும் போட்டோவைப் பதிவிட்டு, பவனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.