இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். நடந்து முடிந்து ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் அவரது ஜனசேனா கட்சி சார்பாகப் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றாலும் கூட்டணி கட்சிகளான பாஜக, ஜனசேனா கட்சி ஆகியவற்றுடன் மந்திரி சபையை அமைக்க முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்றார். அவருக்கடுத்து பவன் கல்யாண் அமைச்சராகப் பதவியேற்றார். தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவியேற்று முடிந்த பின் பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு, மற்றும் மேடை அருகில் அமர்ந்திருந்த மற்ற மத்திய அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கு வணக்கம் தெரிவித்து வாழ்த்துகளைப் பெற்றார் பவன் கல்யாண். அண்ணன் சிரஞ்சீவி காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார்.
நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார்.