மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா, அவரது காதலரான நடிகர் ஜாகீர் இக்பால் என்பவரை ஜூன் 23ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார். அதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணிகளையும் காதல் ஜோடி ஆரம்பித்துவிட்டதாம்.
ஆனால், சோனாக்ஷி இதுவரையிலும் தன் திருமணம் பற்றி அவரது அப்பா நடிகரும், எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவிற்கு தெரிவிக்கவில்லையாம். இது குறித்து சத்ருகன் சின்ஹா, அளித்த பேட்டி ஒன்றில், “தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நான் டில்லிக்கு வந்துவிட்டேன். எனது மகளின் திட்டங்கள் என்ன என்பது பற்றி நான் யாரிடமும் பேசவில்லை. அவர் திருமணம் செய்து கொள்கிறார் என்பதுதான் உங்களது கேள்வி. அவர் எனன்னிடம் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதே அதற்கான பதில்.
செய்திகள் மூலம் மட்டுமே அது பற்றி தெரிந்து கொண்டேன். நானும் எனது மனைவியும் அவர்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்களைத் தெரிவிப்போம். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவருடைய முடிவை நாங்கள் முழுவதுமாக நம்புகிறோம். அவர் எந்தவிதமான தவறான முடிவையும் எடுக்க மாட்டார். சொந்தமாக முடிவெடுக்க அவருக்கு உரிமை உள்ளது. இந்தக் காலத்தில் பெற்றோர்களிடம் பிள்ளைகள் எதற்கும் அனுமதி கேட்பதில்லை. அவர்கள் தகவல் மட்டுமே தெரிவிக்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
சோனாக்ஷி அவருடைய பெற்றோருக்கு இதுவரையிலும் தன்னுடைய திருமணத்தைப் பற்றி எதுவும் சொல்லாதது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.