மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
காமெடி மற்றும் குணசித்ர நடிகராக இருந்த காளி வெங்கட் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது அவர் கதை நாயகனாக நடிக்கும் படம் 'தோனிமா'. இதனை 'பக்ரீத்' படத்தை இயக்கிய ஜெகதீசன் சுப்பு இயக்குகிறார். காளி வெங்கட் ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். பாலாவின் 'வணங்கான்' படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ரோஷிணி பிரகாஷ் தான் இவர். இதில் அவர் 12 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கிறார். காளி வெங்கட், ரோஷிணி பிரகாஷ் தவிர விஷ்வ ராஜ், விவேக் பிரசன்னா, பி.எல்.தேனப்பன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் ஜெகதீசன் சுப்பு கூறியதாவது: 'பக்ரீத்' படத்தில் ஒரு குடும்பம், ஒரு ஒட்டகம் சுற்றி நடக்கும் கதையை சொன்னேன். இதில் ஒரு குடும்பம், ஒரு நாய்க்குட்டியை சுற்றி நடக்கும் கதையை சொல்கிறேன். விலங்குகள் மீது எனக்கு தனிப்பிரியம் உண்டு. அதனால்தான் விலங்கை மையப்படுத்தி உணர்வுபூர்வமான கதையை சொல்கிறேன்.
காளி வெங்கட், ரோஷிணி தம்பதியின் மகனாக விஷ்வ ராஜ் நடித்திருக்கிறார். மகனுக்கு காது ஆபேரஷன் செய்வதற்காக அல்லல்படும் அம்மாவாக ரோஷிணி நடித்துள்ளார். இவர்களுக்கு ஒரு நாய்க்குட்டி கிடைக்கிறது. அது பெண் நாய்க்குட்டி என்பதால் அதற்கு 'தோனிமா' என காளி வெங்கட் பெயர் வைக்கிறார். விலங்கு மீதான பாசத்தையும் மனிதர்களின் உணர்வுகளையும் சொல்லும் படமாக இது இருக்கும் என்கிறார்.