பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பெங்களூருவில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. தெலுங்கு சினிமா பிரபலங்கள் சிலரும் அதில் கலந்து கொண்டனர். காவல்துறையினர் நடத்திய ரத்தப் பரிசோதனையில் பலர் போதை பொருள் உட்கொண்டது தெரிய வந்தது.
அந்த பார்ட்டியில் கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஹேமா மீது குற்றம் சாட்டப்பட்டது. முதலில் அவர் அதை மறுத்தார். ஆனால், ரத்த பரிசோதனையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பெங்களூரு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஜூன் 1ம் தேதியே அவர் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் விசாரணைக்கு வந்தார். அப்போது அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் பலதரப்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
பின் அவரை மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நடிகை ஹேமா கைது செய்யப்பட்டுள்ளது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.