ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழில் 'ரெபல்' என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை மமிதா பைஜு. அந்தப் படம் இங்கு சரியாக ஓடவுமில்லை. ஆனாலும், 'பிரேமலு' மலையாளப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து ரசித்து மமிதாவைக் கொண்டாட ஆரம்பித்தனர்.
இன்றைய இளம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறும் அளவிற்கு அவர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் மமிதா. நேற்று சென்னையில் உள்ள மால் ஒன்றில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதற்காக அந்த மாலுக்குள் வந்த மமிதாவை சென்னை ரசிகர்கள் மிரள வைத்துவிட்டார்கள்.
அவரைப் பார்க்க அதிக கூட்டம் கூடியது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக இல்லாததால் மமிதாவை நெருங்கியது கூட்டம். எப்படியோ தட்டுத் தடுமாறி அவரை கடைக்குள் அழைத்து வந்து கடையைத் திறந்துவிட்டனர். ஒரு பக்கம் ரசிகர்களின் அன்பு மழையில் மமிதா நனைந்தாலும் கூடிய கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போய் விட்டார்.
தமிழில் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்தால் நயன்தாராவின் இடத்தை எளிதில் பிடித்துவிடுவார் மமிதா.