டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழில் 'ரெபல்' என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை மமிதா பைஜு. அந்தப் படம் இங்கு சரியாக ஓடவுமில்லை. ஆனாலும், 'பிரேமலு' மலையாளப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து ரசித்து மமிதாவைக் கொண்டாட ஆரம்பித்தனர்.
இன்றைய இளம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறும் அளவிற்கு அவர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் மமிதா. நேற்று சென்னையில் உள்ள மால் ஒன்றில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதற்காக அந்த மாலுக்குள் வந்த மமிதாவை சென்னை ரசிகர்கள் மிரள வைத்துவிட்டார்கள்.
அவரைப் பார்க்க அதிக கூட்டம் கூடியது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக இல்லாததால் மமிதாவை நெருங்கியது கூட்டம். எப்படியோ தட்டுத் தடுமாறி அவரை கடைக்குள் அழைத்து வந்து கடையைத் திறந்துவிட்டனர். ஒரு பக்கம் ரசிகர்களின் அன்பு மழையில் மமிதா நனைந்தாலும் கூடிய கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போய் விட்டார்.
தமிழில் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்தால் நயன்தாராவின் இடத்தை எளிதில் பிடித்துவிடுவார் மமிதா.




